Tuesday, February 24, 2009

புதுச்சேரி எம்.ஆர்.எஃப். நிறுவனத்தில் லாக் அவுட்

சென்னையை சேர்ந்த எம்.ஆர்.எஃப்.டயர் கம்பெனி, அதன் புதுச்சேரி தொழிற்சாலையில் லாக்அவுட் செய்திருக்கிறது. தொழிற்சாலையில் ஏற்பட்டிருக்கும் தொழிலாளர்கள் பிரச்னை காரணமாக லாக் அவுட் செய்திருப்பதாக மும்பை பங்கு சந்தையில் அது அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 22 ம் தேதி இரண்டாவது ஷிப்ட்டில் இருந்து லாக்அவுட் செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. எம்.ஆர்.எஃப்.,நிறுவனத்திற்கு சென்னை, அரக்கோணம், புதுச்சேரி, கேரளாவில் கோட்டயம், ஆந்திராவில் மேடக் மற்றும் கோவாவில் தொழிற்சாலைகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் இருக்கும் அதன் தொழிற்சாலைகளில் ஒரு வருடத்திற்கு மேலாக தொழிலாளர் பிரச்னை இருந்து வருகிறது. அதன் திருவெற்றியூர் தொழிற்சாலை கடந்த 2007 டிசம்பர் மாதத்தில் இருந்தே மூடப்பட்டிருக்கிறது. அங்கு எம்.ஆர்.எஃப்., நிர்வாகம் கொண்டுவந்த நிரந்தர லாக் அவுட் திட்டத்தை தடை செய்ய தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முயற்சியை சென்னை ஐகோர்ட் கடந்த வாரத்தில் நிறுத்தி வைத்தது.
நன்றி :தினமலர்

No comments: