Monday, December 1, 2008

தாக்குதலில் உயிர் இழந்தால் காப்பீட்டு தொகை கிடைக்குமா ?

மும்பை தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்காக நாடே துக்கம் அனுசரித்துக் கொண்டிருக்கும் போது, அந்த தாக்குதலில் கொள்ளப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு காப்பீட்டு தொகை கிடைப்பது அவ்வளது எளிதான விஷயம் அல்ல என்கிறார்கள். தீவிரவாத தாக்குதலில் கொல்லப்படுபவர்களுக்கு இன்சூரன்ஸ் கவர் ஆகுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ' டெரோரிஸம் இன்சூரன்ஸ் கவர் ' என்பது இப்போதைக்கு இந்தியாவில் நடைமுறையில் இல்லை என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் பொதுவாக எல்லா லைப் இன்சூரன்ஸ் கம்பெனிகளுமே, இன்சூர் செய்தவர் தற்கொலை தவிர வேறு எந்த வகையில் இறந்தாலும், இன்சூர் செய்த தொகை கொடுக்கப்படும் என்றுதான் சொல்கிறது. எனவே இதையும் தற்கொலை இல்லாத மரணம் என்ற வகையில் சேர்த்துக்கொள்ளலாம் என்கிறார்கள். ஆனால் அமெரிககா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இருப்பது போல் இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு இன்சூரன்ஸ் இல்லை என்கிறார்கள் கோடக் லைப் இன்சூரன்ஸ் அதிகாரிகள். ஆனால் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனிகள், தீவிரவாதத்திற்கான இன்சூரன்ஸ் கவரை, தீ விபத்துடன் சேர்த்து add-on இன்சூரன்ஸ் பாலிசியாக வைத்திருக்கின்றன.
நன்றி : தினமலர்


No comments: