Thursday, November 20, 2008

ஐந்து வருடங்கள் இல்லாத அளவாக அமெரிக்க பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி

அமெரிக்க பங்கு சந்தையில் நேற்று புதன்கிழமை கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத அளவாக வால்ஸ்டிரீட்டில் 5 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. டவ் ஜோன்ஸ் இன்டக்ஸ் 427 புள்ளிகள் குறைந்து 7,997.28 புள்ளிகளுக்கு வந்து விட்டது. 2003 க்குப்பிறகு நேற்று தான் டவ்ஜோன்ஸ் இன்டக்ஸ் 8,000 புள்ளிகளுக்கும் கீழே போயிருக்கிறது. அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவை முன்னிட்டு அமெரிக்க பங்கு சந்தையிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அக்டோபர் மாதத்தில் அங்கு கன்சூமர் பிரைஸ் ஒரு சதவீதம் குறைந்திருக்கிறது. கடந்த 61 ஆண்டுகளுக்குப்பின் இப்போதுதான் இவ்வளவு குறைந்திருக்கிறது. இது பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவையே காண்பிக்கிறது. இதனால் அங்குள்ள ஃபெடரல் ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தில் 0.5 சதவீதத்தை டிசம்பரில் குறைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஏற்கனவே அங்கு வட்டி ஒரு சதவீதம்தான் வசூலிக்கப்படுகிறது. அது இனிமேல் 0.5 சதவீதமாக குறைக்கப்படும் என்கிறார்கள். கன்சூமர் பிரைஸ் குறைந்திருப்பதால் பெடரல் ரிசர்வ் வங்கி, வட்டியை மேலும் குறைக்க வேண்டியதாகிறது. கன்சூமர் பிரைஸ் குறைந்திருப்பதால் கச்சா எண்ணெய் விலையும் குறைந்து விட்டது. அது பேரலுக்கு 54 டாலருக்கும் குறைவான விலைக்கு போய் விட்டது. அமெரிக்காவின் மூன்று மிகப்பெரிய கார் கம்பெனிகளான ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்டு மற்றும் கிரைஸ்லர் ஆகியவை அமெரிக்க அரசாங்கத்திடம 2500 கோடி டாலர் கடன் கேட்டு நின்று கொண்டிருக்கின்றன. 2500 கோடி டாலர் கடன் கொடுக்கவில்லை என்றால் நாங்கள் கம்பெனியை மூட வேண்டியதுதான் என்கின்றன அவைகள். அதன் பின் அதில் வேலைபார்த்து வந்தவர்களுக்கெல்லாம் வேலை இல்லாமல் போய்விடும் என்கின்றனர்.
நன்றி : தினமலர்


No comments: