Wednesday, November 26, 2008

பங்கு சந்தை உயர்ந்தது ; சென்செக்ஸ் 9,000 புள்ளிகளை எட்டியது

மும்பை பங்கு சந்தையில் காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்து மாலை 3 மணி வரை சரசரி அளவில் உயர்ந்திருந்த சென்செக்ஸ், கடைசி ஒரு மணி நேர வர்த்தகத்தில் வேகமாக உயர துவங்கியது. சென்செக்ஸ் 9,000 புள்ளிகளுக்கு மேலும் நிப்டி 2,700 புள்ளிகளுக்கு மேலும் சென்றுள்ளது. சீனாவை போலவே இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டியை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு இன்று பலமாக இருந்தது. சீனாவில் சி.ஆர்.ஆர்.,மற்றும் மற்ற வட்டி ஒரு சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது. பெட்ரோலிய பொருட்களுக்கான விலையை குறைக்கப்போவதாக பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா நேற்று அறிவித்திருந்ததை அடுத்து, விரைவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இந்த இரண்டு நல்ல செய்திகளும் இன்று சந்தையை மேலே இழுத்து சென்றது. ஆயில், பேங்கிங், பவர், கேப்பிடல் குட்ஸ், மெட்டல் மற்றும் டெலிகாம் பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன. மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 331.19 புள்ளிகள் ( 3.81 சதவீதம் ) உயர்ந்து 9,026.72 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 98.25 புள்ளிகள் ( 3.7 சதவீதம் ) உயர்ந்து 2,752.25 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்.டி.எஃப்.சி.பேங்க், பார்தி ஏர்டெல், ஹெச்.டி.எஃப்.சி., என்.டி.பி.சி., ஐ.டி.சி., எஸ்.பி.ஐ., எல் அண்ட் டி, ஸ்டெர்லைட் இன்டஸ்டிரீஸ், ஓ.என்.ஜி.சி., டி.சி.எஸ்., விப்ரோ, ரிலையன்ஸ் இன்ஃரா, இன்போசிஸ் டெக்னாலஜிஸ், பெல் ஆகிய பங்குகள் அதிகம் லாபம் பார்த்தன. ஆசிய பங்கு சந்தைகள் எல்லாவற்றிலுமே இன்று ஏற்ற நிலைதான் காணப்பட்டது.
நன்றி : தினமலர்


1 comment:

Tech Shankar said...

இப்படியே உயர்ந்தால் பரவாயில்லை. உயருமா?