Wednesday, October 29, 2008

உலகம் முழுவதும் பங்கு சந்தைகளில் முன்னேற்றம்

உலகம் முழுவதிலும் உள்ள பங்கு சந்தைகளில் இன்று நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. காலை நேர வர்த்தகத்தில் ஜப்பானின் நிக்கி 232.60 புள்ளிகள் உயர்ந்திருந்தது. அதே போல் வர்த்தக துவக்கத்தில் உயர்ந்திருந்த தென் கொரியாவின் கோஸ்பி பின்னர் குறைந்து மைனஸ் 30 புள்ளிகளாக இருந்தது. ஜப்பானை போலவே ஹாங்காங்கின் ஹேங்செங்க் 171 புள்ளிகள் உயர்ந்திருந்தது. தைவானின் இன்டக்ஸ் 35 புள்ளிகள் உயர்ந்திருந்தது. செவ்வாய் அன்று முடிவில் அமெரிக்க வால்ஸ்டிரீட்டில் 10 சதவீத புள்ளிகள் உயர்ந்திருந்ததை தொடர்ந்து இன்று ஆசிய மற்றும் இந்திய பங்கு சந்தைகளில் ஏறுமுகம் காணப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள டவ்ஜோன்ஸ் இன்டக்ஸ் நேற்று 10.88 சதவீதம் உயர்ந்திருந்தது. நாஸ்டாக் 9.53 சதவீதமும், எஸ் அண்ட் பி 10.79 சதவீதமும் உயர்ந்திருந்தது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டியை 0.5 சதவீதத்தில் இருந்து 1 சதவீதம் வரை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அங்கு பங்கு சந்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக சொல்கிறார்கள். அதே போல ஜப்பானிலும் பேங்க் ஆப் டோக்கியோ வட்டியை குறைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். இதன் காரணமாகத்தான் அங்கும் பங்கு சந்தையில் ஏறுமுகம் காணப்படுவதாக சொல்கிறார்கள்.ஏற்றுமதியையே பெரிதும் நம்பிஇருக்கும் ஜப்பான் கம்பெனிகளின் மதிப்பும் உயர்ந்திருக்கிறது. இதற்கு காரணம் ஜப்பான் கரன்சியான யென் னின் மதிப்பு குறைந்திருப்பதுதான் என்கிறார்கள். அமெரிக்காவை போலவே ஐரோப்பாவிலும் பங்கு சந்தைகளில் முன்னேற்றமே காணப்பட்டது. லண்டனின் எஃப்.டி.எஸ்.இ., 1.9 சதவீதம், பாரீசின் சிஏசி 1.6 சதவீதம், ஃபிராங்பர்ட்டின் டாக்ஸ் 11.3 சதவீதம் உயர்ந்திருந்தது. இந்தியாவை பொருத்தவரை இன்று காலை வர்த்தகம் ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.
நன்றி : தினமலர்


No comments: