Monday, October 20, 2008

ஏற்றத்தில் முடிந்த பங்கு சந்தை

ஐரோப்பிய மற்றும் ஆசிய பங்கு சந்தைகளில் இருந்த ஏற்ற நிலை மற்றும் ரிசர்வ் வங்கியின் ஒரு சதவீத ரெபோ ரேட் கட் போன்ற காரணங்களால் இன்று பங்கு சந்தையில் ஏற்ற நிலை காணப்பட்டது. காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே உயர்ந்திருந்த சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 247.74 புள்ளிகள் ( 2.48 சதவீதம் ) உயர்ந்து 10,223.09 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையிலும் நிப்டி 48.45 புள்ளிகள் ( 1.58 சதவீதம் ) உயர்ந்து 3,122.80 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் டெக்னாலஜி, பேங்கிங், பார்மா,மெட்டல் மற்றும் சில ஆயில் கம்பெனி பங்குகள் அதிகம் வாங்கப்பட்டது. மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் அதிகம் விற்கப்பட்டன. ரியல் எஸ்டேட், பவர், சில ஆட்டோ நிறுவன பங்குகள் அதிகம் விற்கப்பட்டன.ரிசர்வ் வங்கியின் ஒரு சதவீத பெரோ ரேட் குறைப்பு இன்றைய வர்த்தகத்தில் அதிக அளவு உதவி புரிந்தது.இன்று பேங்கிங் இன்டக்ஸ் 2.08 சதவீதம் அல்லது 149.03 புள்ளிகள் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 2003 க்குப்பின் இப்போது தான் ரெபோ ரேட் 9 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. சி.ஆர்.ஆர். எனப்படும் கட்டாய பண கையிருப்பு விகிதமும் 2.5 சதவீதம் குறைக்கப்பட்டிருப்பதால் வங்கிகளில் தாராளமாக பணபுழக்கம் இருந்து வருகிறது. இந்த இரு நடவடிக்கைகளும் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று ஐ.டி.பி.ஐ. வங்கியின் சேர்மன் யோகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். ஆனால் வங்கிகள் வட்டியை குறைப்பது, கடனுக்கான டிமாண்ட் எப்படி இருக்கிறது என்பதை பொருத்தே அமையும் என்றார்.
நன்றி :தினமலர்


No comments: