Monday, September 8, 2008

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுகிறார் லட்சுமி மிட்டல்

அமெரிக்க பிசினஸ் பத்திரிக்கையான ஃபோர்ப்ஸ், வாழ்நாள் சாதனையாளர் விருதை லட்சுமி மிட்டலுக்கு இன்று வழங்குகிறது . சர்வதேச அளவில் தொழில்துறையில் சாதனை புரியும் மிகப்பெரிய தொழில் அதிபர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. சிங்கப்பூரில் இன்றிரவு நடக்கும் தொழில் அதிபர்கள் கூட்டத்தில் இந்த விருது வழங்கப்படுகிறது. உலக அளவில் 160 பில்லியன் டாலருக்கும் மேல் மதிப்புள்ள தொழில்களின் அதிபர்கள் சுமார் 450 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். இந்த வருடம் ஜூன் மாதத்தில்தான் உலகின் நான்காவது மிகப்பெரிய பணக்காரராக லட்சுமி மிட்டல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது நிறுவனத்தின் அப்போதைய மதிப்பு 45 பில்லியன் டாலர்கள். ராஜஸ்தானில் பிறந்த லட்சுமி மிட்டல், 1976ம் ஆண்டு மிட்டல் ஸ்டீல் கம்பெனியை நிறுவினார். பின்னர் அவர் உலகம் முழுவதும் உள்ள பல ஸ்டீல் கம்பெனிகளை வாங்கி குவித்தார். 2006ம் ஆண்டு ஆர்செலர் கம்பெனியை வாங்கியபின் உலகில் அதிகம் ஸ்டீல் உற்பத்தி செய்பவராக லட்சுமி மிட்டல் உயர்ந்தார்.

நன்றி : தினமலர்


No comments: