Wednesday, September 10, 2008

சரிவில் முடிந்த இன்றைய பங்கு சந்தை

இன்றும் மும்பை பங்கு சந்தை சரிவில்தான் முடிந்திருக்கிறது. காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே குறைந்து கொண்டிருந்த சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 238.15 புள்ளிகள் ( 1.6 சதவீதம் ) குறைந்து 14,662.61 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 68.45 புள்ளிகள் ( 1.53 சதவீதம் ) குறைந்து 4,400.25 புள்ளிகளில் முடிந்தது. இன்றைய வர்த்தகத்தில் மெட்டல், ஆயில், டெலிகாம், பவர் மற்றும் தனியார் வங்கி பங்குகள் குறைந்திருந்தன.
நன்றி : தினமலர்


No comments: