Tuesday, September 2, 2008

பர்சனல் லோன் 'நோ' டிபாசிட் இருந்தால் 'ஓகே!'

அரசு மற்றும் தனியார் வங்கிகளில் பர்சனல் லோன் தர, கெடுபிடி அதிகமாகி விட்டது; சில வங்கி
களில், பிக்சட் டிபாசிட்டில் பணம் போட்டிருந்தால், அதற்கு ஈடாக கடன் தரப்படுகிறது.
பணவீக்கம் அதிகரித்ததை அடுத்து, வங்கி கடன்கள் மீதான வட்டி வீதம் வானளாவ உயர்ந்து விட்டது. பர்சனல் லோனுக்கு வட்டி வீதம் 18 சதவீதத்தில் இருந்து 25 சதவீதம் வரை வசூலிக்கப்படு
கிறது. வீட்டு லோன் மீதான ப்ளோட்டிங் கடனுக்கு வட்டி வீதம் 12 சதவீதம் வரை போடப்படுகிறது.
வீட்டு லோனுக்கு, வீட்டு பத்திரம் அடமானமாக வைக்கப்படுவதால், கடனைக் கட்டாமல் டிமிக்கி கொடுத்தாலும், வீட்டை ஜப்தி செய்ய முடியும். ஆனால், பர்சனல் லோன், எந்த அடமானம் இல்லாமல் தரப்படுகிறது. அப்படி தந்த கடன்களில், பல வங்கிகளில் 25 சதவீதத்துக்கு மேல் திரும்ப வரவில்லை என்று சமீபத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து, பர்சனல் லோன் தருவதை பல வங்கிகள் நிறுத்தி விட்டன; சில வங்கிகள், வாடிக்கையாளர்களின் தொந்தரவு காரணமாக, மாதக்கணக்கில் இழுத்தடிக்கின்றன. அப்படியே முடியாவிட்டாலும், மிகக் குறைந்த அளவில் கடன் தருகின்றன. அதையும் சம்பளக்கணக்கில் பிடித்தம் செய்யும் வகையில் தருகின்றன.தனியார் வங்கிகளைப் பொறுத்தவரை, கொஞ்சம் கூட பரிவு காட்டாமல், பர்சனல் லோன் தருவதை மறுத்து வருகின்றன. சில வங்கிகள், பிக்சட் டிபாசிட்டில் பணம் இருந்தால், அதை ஈடாக வைத்து, கடன் தர ஒப்புக் கொள்கின்றன.
வட்டி வீதம் பல மடங்கு உயர்ந்து விட்டதை அடுத்து, வங்கிகளில், வீட்டு லோன் தவிர, வாகன, பர்சனல் லோன் மீதான கடன் பாக்கித் தொகை தவணைகள் திடீரென குறைந்து வருகின்றன. கடன் பாக்கி தவணையை ஒழுங்காக கட்டி வந்த பலரும் இப்போது நிறுத்தி விட்டனர். இதனால், பர்சனல் லோன் கடன் பாக்கி அதிகரித்து வருகிறது.
நன்றி : தினமலர்



No comments: