Monday, September 15, 2008

பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி : சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிந்தன

இன்று காலை தேசிய பங்கு சந்தையில் வர்த்தகம் துவங்கியதுமே நிப்டி 112 புள்ளிகள் குறைந்து விட்டன. அதே போல் மும்பை பங்கு சந்தையிலும் வர்த்தகம் ஆரம்பித்ததுமே சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் குறைந்து விட்டது. அமெரிக்க நிதி நிறுவனமான லேமன் பிரதர்ஸ் இல் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் அங்கு ஏற்பட்டுள்ள சிக்கலை தொடர்ந்துதான் இந்திய பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி அடைந்தது என்கிறார்கள். காலை 10.07 மணிக்கு மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 710.31 புள்ளிகள் குறைந்து 13,290.50 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 195.50 புள்ளிகள் குறைந்து 4,032.95 புள்ளிகளாக இருந்தது.
நன்றி : தினமலர்


No comments: