Friday, September 26, 2008

ஏ.டி.எம்., மையங்கள் மூலமாக தினமும் ரூ.1,000 கோடி பரிமாற்றம்


புதுடில்லி: 'நாடு முழுவதும் உள்ள பல்வேறு வங்கிகளின் ஏ.டி.எம்., மையங்களில் இருந்து, தினமும் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு பண பரிமாற்றம் நிகழ்கிறது' என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி, கடந்த ஏப்ரலில் இருந்து ஜூன் வரையிலான காலத்தில் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன. இவற்றில், 22,500 மையங்கள் பொதுத்துறை வங்கிகளுக்கு சொந்தமானவை. 10,500 மையங்கள் தனியார் வங்கிகளுக்கு சொந்தமானவை. 1,050 மையங்கள் வெளிநாட்டு வங்கிகளால் அமைக்கப் பட்டுள்ளன. பழைய பொதுத்துறை வங்கிகள் 2,190 மையங்களை அமைத்துள் ளன. இந்த மையங்களில் இருந்து சராசரியாக தினமும் 1,000 கோடி ரூபாய் அளவிற்கு பணம் எடுக்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளின் ஏ.டி.எம்.,களில் இருந்து சராசரியாக தினமும் 760 கோடி ரூபாயும், தனியார் வங்கிகளின் மையங்களில் இருந்து தினமும் 355 கோடி ரூபாயும் வாடிக்கையாளர்களால் எடுக்கப்படுகின்றன. 2008-09ம் ஆண்டு இறுதியில் நாட்டில் மேலும் 10,500 ஏ.டி.எம்., மையங்கள் அமைக்கப்படலாம். இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர்

No comments: