Thursday, August 21, 2008

ஒலிம்பிக் போட்டியால் அங்குள்ள ஹோட்டல்களுக்கு கொழுத்த வருமானம்

சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியால் அங்குள்ள ஹோட்டல்கள் பார்வையாளர் களால் நிரம்பி வழிகின்றன. இதனால் அங்குள்ள ஹோட்டல்கள் நல்ல லாபம் பார்த்து வருகின்றன. ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமான ஆகஸ்ட் 8ம் தேதி இரவு பெய்ஜிங்கில் இருக்கும் ஹோட்டல்களில், ஒரு ரூமில் இருந்து கிடைக்கும் வருமானம் ( ரெவன்யூ பெர் அவெய்லபிள் ரூம் ) 546 சதவீதம் உயர்ந்திருந்தது. ஹோட்டல்களில் ரூம் தேவைப்படுவோர் எண்ணிக்கை 86.3 சதவீதமும், ரூம் கட்டணம் 421 சதவீதமும் உயர்ந்திருந்ததாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 2007ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி சராசரியாக 87 டாலராக இருந்த ரூம் கட்டணம், இந்த வருடம் ஆகஸ்ட் 8ம் தேதி 451 டாலராக உயர்ந்து விட்டது. ஒலிம்பிக் போட்டி ஆரம்பமான நாட்களை ஒட்டிய இரு தினங்களில் மட்டும் அங்குள்ள ஹோட்டல்களில் ரூம்களுக்கான தேவை ( டிமாண்ட் ) அதிகரித்ததோடு ரூம் வாடகையும் அதிகரித்திருக்கிறது. ஆகஸ்ட் 24ம் தேதிதான் ஒலிம்பிக் முடிவடைகிறது என்பதால் அதுவரை அங்குள்ள ஹோட்களுக்கு நல்ல கொண்டாட்டம்தான்.
நன்றி : தினமலர்

No comments: