Tuesday, August 12, 2008

சரிவில் முடிந்த இன்றைய பங்கு சந்தை

இன்று மும்பை பங்கு சந்தை சரிவில் முடிந்துள்ளது. மும்பை பங்கு சந்தையில் மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 291.79 புள்ளிகள் ( 1.88 சதவீதம் ) குறைந்து, 15,212.13 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 68.15 புள்ளிகள் ( 1.47 சதவீதம் ) குறைந்து, 4,552.25 புள்ளிகளில் முடிந்தது. ஜூனில் இந்திய தொழில் வளர்ச்சி 5.4 சதவீதமாக குறைந்துள்ள தகவல் வெளிவந்ததில் இருந்து சென்செக்ஸ் குறைய ஆரம்பித்ததாக சொல்கிறார்கள். ஜூன் மாதத்தில் இந்திய தொழில் வளர்ச்சி, மே மாத வளர்ச்சியான 4.1 சதவீதத்தை விட கூடுதலாக 5.4 சதவீதமாக இருந்தாலும், கடந்த ஆண்டு ஜூன் மாத வளர்ச்சியான 8.9 சதவீதத்துடன் ஒப்பிட்டால் மிக குறைவானதே. சி.என்.பி.சி.-டிவி18 ன் கணிப்பான 5.95 சதவீதத்தை விட குறைவான வளர்ச்சியே ( 5.4 சதவீதம் ) இந்த ஜூனில் இருந்துள்ளதால் அது பங்கு சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்கிறார்கள்.

No comments: