Monday, August 25, 2008

தமிழ்நாட்டில் டீசல் பெட்ரோல் பங்குகளுக்கு ஞாயிறு விடுமுறை

தமிழ்நாட்டில் தற்போது டீசலுக்கு ஏற்பட்டுள்ள பெரும் தட்டுப்பாடு காரணமாக வரும் செப்டம்பர் 15 ம் தேதியில் இருந்து பெட்ரோல் நிலையங்களுக்கு ஞாயிறுதோறும் விடுமுறை விடுவது என்று தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விநியோகஸ்தர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்து இன்று சேலத்தில் தமிழ்நாடு பெட்ரோல்,டீசல் வினியோகஸ்தர்கள் சங்கம் கூடி ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் பெட்ரோல்,டீசல் தட்டுப்பாட்டை சமாளிக்க, பிரதி ஞாயிறுதோறும் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு விடுமுறை விடுவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் வார நாட்களில் காலை 6 மணி முதல் இரவு பத்து மணி வரைக்கு மட்டுமே பெட்ரோல் பங்க்குகள் இயக்கப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் செப்டம்பர்15ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று, தமிழ்நாடு பெட்ரோல், டீசல் வினியோகஸ்தர்கள் சங்கங்க தலைவர் கண்ணன் தெரிவித்தார். இதற்கிடையே, டீசல் தட்டுப்பாடு குறித்து மத்திய அரசுக்கு, தமிழக அரசு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், தமிழகத்தில் நிலவி வரும் டீசல் தட்டுப்பாட்டு பிரச்னையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளதாக சொல்லப்படுறகிறது.
நன்றி : தினமலர்

No comments: