Friday, August 15, 2008

எச்.ஐ.வி., பாதிக்கப்பட்டோருக்காக குரூப் இன்சூரன்ஸ் திட்டம் துவக்கம்

எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டோருக்காக, இந்தியாவிலேயே முதல் முறையாக 'குரூப் இன்சூரன்ஸ்' திட்டம் துவக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் 6 மாவட்டங்களில் வசிக்கும் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்ட 250 பேருக்கு பயனளிக்கும் வகையில் 'குரூப் இன்சூரன்ஸ் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதில் சிகிச்சை பெறுவதற்காக ஒவ்வொருவருக்கும் ரூ30 ஆயிரத்திற்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் கர்நாடகாவில் உள்ள எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர்கள் அமைப்பும், சர்வதேச மக்கட் தொகை சேவை அமைப்பும் ஸ்டார் ஹெல்த் அலைடு இன்சூரன்ஸ் கம்பெனியுடன் இணைந்து, இத்திட்டத்தை துவக்கிவைத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் எச். ஐ.வி., பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவமனை செலவுக்காக ரூ, 15 ஆயிரமும், இறப்புக்கு பின் அவரது குடும்பத்தாருக்கு ரூ15 ஆயிரமும் இழப்பீடு கிடைக்கும் வகையில் காப்பீடு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பின் டைரக்டர் ஜெனரல் கே.சுஜாதா ராவ் துவக்கி வைத்து பேசுகையில், 'நாடு முழுவதும் எடுக்கப்பட்ட ஆய்வில், எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டோர் இரண்டு லட்சத்து 40 ஆயிரம் பேர் உள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை பெறுவதற்கு நிதி உதவி கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம்' என்றார்.
நன்றி : தினமலர்



No comments: