Wednesday, July 16, 2008

இன்றும் சரிவில் முடிந்த பங்கு சந்தை


மும்பை :வங்கிகளுக்கான ரெபோ ரேட்டை ரிசர்வ் வங்கி 0.5 சதவீதம் வரை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பாலும் பணவீக்கம் 13 சதவீதம் வரை உயர்ந்து விடும் என்ற அச்சத்தாலும் இன்றைய பங்கு சந்தையில் சென்செக்ஸ் சரிந்தன. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 100.39 புள்ளிகள் ( 0.79 சதவீதம் ) குறைந்து 12,575.80 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 44.40 புள்ளிகள் ( 1.15 சதவீதம் ) குறைந்து 3,816.70 புள்ளிகளில் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ஹெச்.டி.எஃப்.சி, எஸ்.பி.ஐ., டாடா ஸ்டீல், ஐ.சி.ஐ.சி.ஐ.வங்கி, டி.எல்.எஃப், யுனிடெக் ஆகிய பங்குகள் விலை குறைந்திருந்தது


நன்றி : தினமலர்


No comments: