Tuesday, July 15, 2008

இன்றைய பங்கு சந்தையில் கடந்த 15 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி


மும்பை : மும்பை பங்கு சந்தையில் கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவாக இன்று கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. கரடிகளின் ஆதிக்கம் இன்று கடுமையாக இருந்தது. இதனால் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸூம் தேசிய பங்கு சந்தையில் நிப்டியும் கடும் வீழ்ச்சியை அடைந்தது. இன்றைய வீழ்ச்சியில் பெரும் பங்கேற்றது வங்கித்துறைதான். கேப்பிடல் பொருட்கள், மெட்டல், பவர், ரியால்டி, பார்மா மற்றும் ஆயில் அண்ட் கேஸ் துறை பங்குகள் கடும் வீழ்ச்சியை கண்டன. சென்செக்ஸூம் நிப்டியும் இந்த வருடத்தில் இன்றுதான் பெருமளவு வீழ்ச்சியடைந்திருந்தன. இந்தியா உள்பட ஆசிய நாடுகள் அனைத்திலும் மற்றும் ஐரோப்பிய பங்கு சந்தையிலும் கடும் வீழ்ச்சியே இருந்தது. மும்பை பங்கு சந்தையில் காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே குறைய துவங்கிய சென்செக்ஸ் மாலை வரை அப்படியே நீடித்தது. மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 654.32 புள்ளிகள் ( 4.91 சதவீதம் ) குறைந்து 12,676.19 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 178.60 புள்ளிகள் ( 4.42 சதவீதம் ) குறைந்து 3,861.10 புள்ளிகளில் முடிந்தது. உலக அளவில் இன்று பங்கு சந்தையில் வீழ்ச்சி அடைந்ததற்கு காரணம் அமெரிக்க நிதி துறையில் ஏற்பட்ட கடும் நெருக்கடிதான் என்று சொல்லப்படுகிறது. அமெரிக்க வங்கித்துறை இப்போது கடும் வீழ்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. பிரிட்டனிலும் கடந்த மாதத்தில் வீடுகளின் விலை கடுமையாக குறைந்திருந்ததாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் பங்கு சந்தையில் ஏற்பட்டுள்ள கடும் வீழ்ச்சியால் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான ரெபோ ரேட்டை இன்னும் 0.5 சதவீதம் உயர்த்தும் என்று தெரிகிறது.

நன்றி : தினமலர்



No comments: