Thursday, June 26, 2008

ரூ. 560 கோடியில் பங்களா வாங்கினார் லட்சுமி மிட்டல்

இந்திய தொழில் அதிபர் லட்சுமி மிட்டல், லண்டனில் ரூ. 560 கோடியில் ஆடம்பர பங்களாவை வாங்கியுள்ளார். ஸ்டீல் உற்பத்தியில் சர்வதேச அளவில், இந்தியாவைச் சேர்ந்த தொழில் அதிபர் லட்சுமி மிட்டல் புகழ் பெற்று விளங்குகிறார். இந்த ஆண்டு வெளியான உலகின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பெற்ற பெருமையும் இவருக்கு உண்டு. பிரிட்டனில், லட்சுமி மிட்டலுக்கு ஏற்கனவே இரண்டு ஆடம்பர பங்களாக்கள் உள்ளன. இந்நிலையில், லண்டனில் செல்வாக்கு மிகுந்தவர்கள் வசிக்கும் கென்சிங்டன் அரண்மனை தோட்ட பகுதியில் ஒரு புதிய பங்களாவை வாங்கியுள்ளார். இதன் மதிப்பு, ரூ. 560 கோடி.

நன்றி : தினமலர்


No comments: