Tuesday, February 17, 2009

பங்கு சந்தையில் தொடர்ந்து சரிவு

பங்கு சந்தையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவு ஏற்பட்டிருக்கிறது. நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக பங்கு சந்தையில் பங்குகள் அதிக அளவில் விற்கும் போக்கு காணப்பட்டது. இன்ஃப்ராஸ்டிரக்சர், மெட்டல், டெக்னாலஜி, மற்றும் ஆயில் அண்ட் கேஸ் பங்குகள் இன்று பெருமளவில் விற்கப்பட்டதால் சென்செக்ஸ் 9,000 புள்ளிகளுக்கு இறங்கி விட்டது. நிப்டி 2,800 புள்ளிகளுக்கும் கீழே சென்று விட்டது. இரண்டு நாட்களில் சென்செக்ஸ் 600 புள்ளிகளையும் நிப்டி 175 புள்ளிகளையும் இழந்திருக்கிறது. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், என்டிபிசி, இன்போசிஸ், ஐசிஐசிஐ பேங்க், எஸ்.பி.ஐ., ஓ.என்.ஜி.சி., ஹெச்.டி.எப்.சி., ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், செய்ல், டி.சி.எஸ்., ஹெச்.டி.எப்.சி.பேங்க் போன்றவைகள் அதிகம் நஷ்டமடைந்திருக்கின்றன. இன்று மும்பை பங்கு சந்தையில் நிப்டி 270.45 புள்ளிகள் ( 2.91 சதவீதம் ) குறைந்து 9,035.00 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 78.00 புள்ளிகள் ( 2.74 சதவீதம் ) குறைந்து 2,770.50 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.

No comments: