Thursday, August 21, 2008

கடும் சரிவில் முடிந்த இன்றைய பங்கு சந்தை

பணவீக்க விகிதம் மேலும் உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால் இன்றைய பங்கு சந்தை கடும் சரிவை சந்தித்தது. மும்பை பங்கு சந்தையில் காலையில் வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே குறைய துவங்கிய சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 434.50 புள்ளிகள் ( 2.96 சதவீதம் ) குறைந்து 14,243.73 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையிலும் நிப்டி 131.90 புள்ளிகள் குறைந்து 4,283.85 புள்ளிகளில் முடிந்துள்ளது. சிஎன்பிசி - டிவி 18 எடுத்த கணிப்பில், ஆகஸ்ட் ஒன்பதாம் தேதியுடன் முடிந்த வாரத்தில் பணவீக்கம் 12.44 சதவீதத்தில் இருந்து 12.62 சதவீதமாக உயர்ந்து விடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் இன்று பங்கு சந்தை சரிவை சந்திக்க வேண்டியதாகி விட்டது. மேலும் ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்கு சந்தையிலும் வீழ்ச்சியே காணப்பட்டது. சீனாவின் ஷாங்கை - 3.63 சதவீதம், ஹாங்காங்கின் ஹேங் செங் - 2.46 சதவீதம், ஜப்பானின் நிக்கி - 0.77 சதவீதம், சிங்கப்பூரின் ஸ்டெரியிட்ஸ் டைம்ஸ் - 1.49 சதவீதம், கொரியாவின் கோஸ்பி - 1.83 சதவீதம் மற்றும் தைவானின் தைவான் வெயிட்டட் - 1.74 சதவீதம் குறைந்திருந்தது.
நன்றி : தினமலர்


No comments: