tag:blogger.com,1999:blog-3334429447183863150.post7732944396921453685..comments2023-10-31T19:55:31.695+05:30Comments on தீப்பெட்டி: அதிக லாபத்துடன் குஷியாக தீபாவளி கொண்டாடிய முதலீட்டாளர்கள்பாரதிhttp://www.blogger.com/profile/01884975618433394537noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3334429447183863150.post-57167413750083022622009-10-19T15:48:18.675+05:302009-10-19T15:48:18.675+05:30தலைமகனை இழந்த தாயின் கதறல்.
கருவில் கண்ட கனவு
களை...தலைமகனை இழந்த தாயின் கதறல்.<br /><br />கருவில் கண்ட கனவு<br />களைந்து போனதையா...<br />உன் உருவில் கண்ட நினைவு<br />கலங்கிப் போனதையா....!<br /><br />பத்து மாதம் உன்னைப்... <br />பெற்றெடுக்கப் பட்ட துன்பம்<br />உன்னைக் கண்டவுடன்...<br />என்னை விட்டுப் போனதையா....!<br /><br />தலைமகனாய்த் தரணியிலே<br />தடம் பதித்திட்ட நாயகனே...<br />தாங்கவில்லையடா - இந்த<br />பூமி உந்தன் வருகைதனை....!<br /><br />எட்டி நடை போடும் அன்னமாய்...<br />எம்மைச் சுற்றிச் சுற்றி<br />வலம் வந்த கண்ணழகா...!<br />யார் கண் பட்டதோ<br />உன் விழி மூட....!<br /><br />பிறர் பிள்ளை தலை தடவி<br />பெருமைப் பட்டேனையா...<br />என் பிள்ளை தானாய் வளருமென<br />கனவு கண்டேனையா....!<br /><br />பாலுட்டும் போது பாசத்தை <br />மட்டும் தான் ஊட்டினேனையா...<br />நீ... போகப் போவது தெரிந்திருந்தால்<br />வீரத்தையும் சேர்த்து ஊட்டியிருப்பேனையா....!<br /><br />உன் வரவு காணாமல் வாசலிலே <br />உன் உறவுகள் துடிக்குதையா...<br />ஒரு இரவு வந்தாலே<br />உன் வீடு சுடுகாடாய் மாறுதையா....!<br /><br />காலை என்னைக் கட்டியணைத்து<br />பிறந்த நாள் முத்தம் தந்தாயையா...<br />மாலை என்னைக் கதறவைத்து<br />உன்னுயிரையே பரிசாய் தந்தாயையா....!<br /><br />பாத்துப் பார்த்து உனைப்<br />பத்திரமாய் வளர்த்தேனையா...<br />பார்த்த விழி பூத்திருக்கப்<br />பாவிகள் உனக்கு <br />பாடை கட்டி விட்டார்களையா....!<br /><br />அனுக்குட்டி என்று <br />ஆயிரம் தடவை அழைப்பேனையா...<br />இந்த அம்மாவை விட்டு விட்டு<br />எங்கே குட்டி போனாயையா.....!<br /><br />உன்னுடன் பிறப்புக்கள் அழும்குரல் <br />உனக்குக் கேட்கவில்லையாயையா...<br />உன் தம்பிமார் படும் வேதனையை<br />என்னால் பார்க்க முடியவில்லையையா....!<br /><br />உன் தந்தை உன்னில் <br />உயிராய் இருந்தாரையா...<br />உன்னுயிர் போனபின்<br />உள்ளம் உடைந்து போனாரையா....!<br /><br />உன்னுயிருக்குப் பதிலாய்<br />என்னுயிர் போயிருக்கலாமேயையா...<br />நீ இல்லா இவ்வுலகில்<br />என்னுடலும் பிணமாய் மாறிவிட்டதையா....!<br /><br />உன் ஆத்மா சாந்தியடைய<br />தினமும் பிராத்திப்போமையா...<br />உன் நினைவுகள் என்றும்<br />எம் உயிரில் உறைந்திருக்குமையா....!<br /><br /><br /><br />உங்கள் அபிசேகா.Manithanhttps://www.blogger.com/profile/07518377985239924364noreply@blogger.com