Saturday, August 14, 2010

புதிய சலுகைத்திட்டத்தை அறிவித்தது எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்

சர்வதேச அளவில் முன்னணி ஏர்லைன்ஸ் நிறுவனமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், விமானப் போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில், ரவுண்ட்டிரிப் விமானப் பயணத்திற்கான கட்டணத்தை அதிரடியாக குறைத்துள்ளது. இதுதொடர்பாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : இந்த கட்டணக்குறைப்பு அனைத்து ( பர்ஸ்ட், பிசினஸ் மற்றும் எகானமி) பிரிவுகளுக்கும் பொருந்தும் என்றும், இந்த கட்டணக்குறைப்பின் மூலம், 13 சதவீத அளவிற்கு சேமிப்பைப் பெறலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணக்குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், அமெரிக்காவின் முக்கிய நகரங்களான நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், ஹாஸ்டன் மற்றும் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையங்களிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளான பக்ரைன், கெய்ரோ, டமாஸ்கஸ், துபாய், குவைத், மஸ்கட், ரியாத், டெஹ்ரான் மற்றும் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் செல்லும் விமானங்களில் இந்த கட்டணக்குறைப்பு பொருந்தும் என்றும், மக்கள் இந்த புதிய சேவையை தங்கள் நிறுவன இணையதளமான டபிள்யூடபிள்யூடபிள்யூ. எமிரேட்ஸ்.காம்/யுஎஸ் என்ற இணையதளத்தில் பெறலாம் என்றும் அதில் தெரிவித்துள்ளது. இந்த தி்ட்டம், இந்த மாதம் 31ம் ‌தேதி முடிவடைவதாகவும், செப்டம்பர் 1ம் தேதி முதல், அக்டோபர் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.


நன்றி: தினமலர்


No comments: